tamilnadu

பழைய முறைப்படி முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி மனு

 திருச்சிராப்பள்ளி, அக்.5- முதியோர் உதவித் தொகையை பழைய முறைப் படியே வழங்க வேண்டும். வங்கி கணக்கு கேட்டு முதி யவர்களை அலைக்கழிப்ப தை கைவிட வேண்டும். 60 வயதான ஆண், பெண் இருபாலருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துவா க்குடி கிளைகள் சார்பில் வெள்ளியன்று துவாக்குடி விஏஓ அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திரு வெறும்பூர் ஒன்றிய செயலா ளர் நடராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டக்குழு உறு ப்பினர் பழனிசாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர் தங்க வேலு, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் மாரியம்மாள் ஆகியோர் பேசினர்.போ ராட்டத்தில் கார்மேகம், செபாஸ் டீன், அமீர், சாத்தையா, ரபீக், ரமேஷ் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

;