districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதி குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதி குழு சார்பில் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பகுதி குழு உறுப்பினர் என்.அன்பு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.ஹரி கிருஷ்ணன், பகுதிக் குழு செயலாளர் கே.வேலன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.