districts

img

மனு கொடுக்கும் போராட்டம்: விழுப்புரத்தில் காவல் துறை கெடுபிடி

விழுப்புரம், அக்.17- வீடட்றோருக்கு வீடு வழங்க வேண்டும், அரசு இடங்களில் குடி யிருப்போருக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும், நகர்ப்புற வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் திங்களன்று (அக். 17) மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய் தலைமையில் பேரணியாக வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து மனு அளிக்க அனுமதிக்கவில்லை. இதை யடுத்து, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவா மாதர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மனுக்களை பெற்றுக் கொண்டார். மாநிலம் முழுவதும் காவல்துறை யினர் அனுமதி அளித்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் காவல் துறையினர் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.