districts

img

மாற்றிடத்துடன் தொகுப்பு வீடுகள் வழங்கிடுக

திருவள்ளூர், மே 5- புதூரில் இருளர் இன மக்களுக்கு மாற்று இடத்துடன் கூடிய தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (மே-5) பொன்னேரி வட்டாட்சி யரிடம் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரமேஷ் நகரில் இருளர் இன மக்கள் 9 குடும்பங்கள், வேட்டைக்காரன் இனத்தை சேர்ந்த 14 குடும்பங்கள் என ஒட்டுமொத்தமாக 23 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக  குளம் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.  ஆதார், குடும்ப அட்டை, மின் இணைப்பு, வாக்காளர் அட்டை போன்ற அரசு ஆவணங்களை பெற்றுள்ளனர். வீட்டு வரியும் முறையாக செலுத்தி வருகின்றனர்.ஆனால் பட்டா மட்டும் வழங்கவில்லை. இந்த நிலையில் மாற்றிடம் வழங்க வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர், பொன்னேரி வட்டாட்சியரிடம் பல முறை மனுக்கள் அளித்துள்ளனர்.எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 21 அன்று வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலு வலர் ஆகியோர் வந்து,  குடிசைகளை 15 நாட்க ளில் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கி யுள்ளனர். மாற்று இடத்து டன் கூடிய தொகுப்பு வீடுகள் வழங்கினால் தான் வேறு இடத்திற்கு மாற்ற லாகி செல்ல முடியும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் சிவகாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், சோழவரம் ஒன்றிய செயலாளரும், ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவருமான ஜி.வி.எல்லையன், கிளை நிர்வாகிகள் மாரி, பாண்டியன்,குமாரி, அஞ்சலி ஆகியோர் வெள்ளியன்று (மே-5) பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரி வித்துள்ளார்.