சட்டவிரோதமாக இயக்கப்படும் பைக் டாக்சியை தடை செய்யக் கோரி அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் எல்.நிர்மல்ராஜை சந்தித்து மனு அளித்தனர். இதில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.குப்புசாமி, எஸ்.கே.முருகேஷ் (சாலை போக்குவரத்து), இ.உமாபதி, ஏ.பக்ரி (சிஐடியு), மாரியப்பன், சுந்தரம் (ஏஐடியுசி), சாமுவேல் (எஸ்டிடியு), ஜாகிர் உசேன் (யுடிஎஸ்), வெற்றிவேல் (யுகேடி) ஆகியோர் கலந்து கொண்டனர்.