districts

img

மீனவ மக்களுக்கு நிரந்தர பட்டா கேட்டு மனு

சிதம்பரம், ஜூன் 6-

    மீனவ மக்களுக்கு நிரந்தர பட்டா கேட்டு கடலோர மக்கள் வாழ்வாதார இயக்கம்  சார்பில் சிதம்பரம் உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமதாசிடம் மனு அளிக்கப்பட்டது.

    அந்த மனுவில், பரங்கிப்பேட்டை பகுதி யில் கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்படைப்பு பட்டா வழங்கி  குடியிருக்க இடம் வழங்கியது. பின்னர் பல ஆண்டுகள் கடந்தும் அவர்கள் வாழும்  இடத்திற்கு நிரந்தர பட்டாவாக மாற்றித் தரவில்லை.

   இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய் துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மீனவ மக்களின் வாழ்விடத்தை பாதுகாக்கும் வகையில் உடனடியாக நிரந்தர பட்டா வழங்க  வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள் ளது.

   மனுவைப் பெற்றுக் கொண்ட நேர்முக உதவியாளர், இதுவரை 2000 பேருக்கு ஒப்படைப்பு பட்டா வழங்கியுள்ளதாகவும், அதில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தரப்பட்ட மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மீதி உள்ளவர்களுக்கு உடனடியாக நிரந்தரப் பட்டா மாற்றித் தரப்படும் என உறுதியளித்தார்.

   இதில் பரங்கிப்பேட்டை ஒன்றிய அமைப்பாளர் சந்தானராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், சிபிஎம் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.