திருவள்ளூர், செப்.10- போலி ஆவணங்களை கொண்டு பட்டா வழங்கியதை ரத்து செய்து, ஊராட்சியில் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று (செப் 10), கும்மிடிப்பூண்டியில் மண்டல துணை வட்டாச்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு ஊராட்சியில் ராமைய்யா என்பவர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு குருகுல பாடசாலை நடத்தி வந்தார். அவர் காலமான பிறகு அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு இரண்டு கோயில்களும் உள்ளன. அதை யொட்டி அவர் பெயரான ராமைய்யா மடம் தெரு என்று அந்த தெருவிற்கு பெயரும் வந்தது. பாதிரிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ராமைய்யா மடம் தெருவில் சர்வே எண் 157/4 ல் 21 சென்ட் நிலம் ஏறக் குறைய ரூ.2 கோடி மதிப்புள்ள அரசு நிலம் உள்ளது. இதனை மாநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் நேமளூர் என்.எஸ்.நகரை சேர்ந்த மனோகரன் ஆகியோர் அரசியல் பலத்துடன் போலி ஆவணங்கள் தயார் செய்து தங்கள் பெயருக்கு கூட்டு பட்டா பெற் றுள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் பெற்றப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து ஊராட்சியில் அந்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மேலும் கிராமத் தின் சார்பிலும் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அரசு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ள குணசேகரன் மற்றும் மனோகரன் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் பாரதியிடம் மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலை வர்களிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர் ப.லோகநா தன், விவசாயிகள் சங்கத்தின் வட்டத் துணைத் பி.கருணாமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், பொருளாளர் எம்.சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.