சென்னை, நவ. 28 - கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜாவிடம், சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் ராஜ்குமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ. சந்துரு, பகுதித் தலை வர் சுந்தர்ராஜன், பொரு ளாளர் மோகன்ராஜ், நிர்வாகிகள் நிரஞ்சனா, வினோத் ஆகியோர் மனு அளித்தனர். அதில், விருகம்பாக்கம் தொகுதிக்குள் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். 5 மாநக ராட்சி பள்ளிகள், ஒரு அரசு பள்ளியும் உள்ளது. இது தவிர்த்து பல தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றி லிருந்து ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 12ஆம் வகுப்பை முடித்து வெளியே வருகின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற விருகை தொகுதிக்குள் ஒரு அரசு கல்லூரி தேவைப்படு கிறது. திமுக அரசு அமைந்தால் அரசு கல்லூரி தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. கோயம்பேட்டில் இருந்த பேருந்து முனையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு அரசு கல்லூரி கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டிருந்தது.