என்டிஇசிஎல் வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் 2ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் ஆகியோர் பேசினர். இதில் சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் வி.குமார், மாநில துணைத் தலைவர் கே.விஜயன், கிளை தலைவர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.