விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர். இரா.லட்சுமணன், ந.புகழேந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஸ்ரீநாதா, நகர மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, ஜேஆர்சி மாவட்ட அமைப்பாளர் முனைவர் மா.பாபு செல்லதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.