districts

img

மனு கொடுக்க முடியாமல் அவதிப்பட்ட மாற்றுத்திறனாளிகள்

கிருஷ்ணகிரி, ஜூலை 28- போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவம்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடை பெற்றது.  சிவம்பட்டி ஊராட்சி, கண்ணன்ட அள்ளி ஊராட்சி, நாகம்பட்டிஊராட்சி, பொம்மேபள்ளி  ஊராட்சி கிராமங்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட குறை தீர்க்கும் முகாம் தனியார் மண்டபத்தின் முதல் தளத்தில் நடைபெற்றதால் வயதானவர்கள், நடக்க முடி யாத மாற்றுத்திறனாளிகள் பலர் மனுக்கள் கொடுக்க முடியாமல் தவித்தனர். 10 அடி உயரம் கொண்ட கட்டிடத்தின்படிகளில் ஏற முடியாமல் சில மாற்றுத் திறனாளிகள் சிரமப்பட்டு மேலே ஏறிச் சென்றுமனு கொடுத்தனர்.  படிகளில் ஏற முயற்சித்தும் கடும் சிரமமாக இருந்ததால் உள்ளே செல்ல முடியாமல் திணறிய 10 மாற்றுத்திறனாளிகளும்,20 க்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த வர்களும் கொண்டுவந்த மனுக்களை அரசு அதிகாரிகளிடம் அளிக்க முடியாமல்  ஏமாற்றத்துடன் வேதனையோடு திரும்பிச் சென்றனர்.  மாற்றுத்திறனாளிகள் வயது முதிர்ந்தவர்கள் படியேறி வந்து கலந்து கொள்ள முடியாத முதல் தளத்தில்  இந்த முகாம் நடத்துவது குறித்து எதிர்ப்பு தெரிவித்ததுடன் தரைத்தளத்தில் நடத்தும்படி கேட்டபோது அரசு அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ள வில்லை.இதனால் பெயரளவுக்கு மட்டுமே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததாக மனுக்களை அளிக்க வந்த பொது மக்கள் வேதனையோடு தெரிவித்தனர்.  இதுகுறித்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது என்னிடம் கேட்காதீர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என கூறி தட்டிக்கழித்தாக முதியவர்கள் தெரிவித்தனர்.   இது போன்ற திட்டங்கள் சார்ந்த முகாம் நடைபெறும்போது மாற்றுத் திறனாளிகள் முதியவர்கள் பங்கேற்கும்படி கீழ்தளத்தில் தேவையான குறைந்தபட்ச வசதிகளோடு நடத்த வேண்டும்என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.