திருவள்ளூர், டிச.20- சோழவரம் அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மீன் பண்ணை களை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் திங்களன்று(டிச.20) போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் சோழ வரம் அருகே உள்ள தேவனேரி கிராமத்தில் 30 க்கும் மேற்பட்ட மீன் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. வீடு கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தில் சட்டவிரோதமாக மீன் பண்ணைகள் அமைத்துள்ளனர். இதிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீர், நீர் நிலைகளில் கலக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் ஏரி நீர் மாசடைந்து பாசனத்திற்கு பயன்ப டுத்த முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. நிலத்தடிநீரின் தன்மை யும் விசமாக மாறி வருவதால் பகுதிவாசிகள் தங்கள் தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமாக செயல்படும் மீன் பண்ணை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள மீன் பண்ணை ஒன்றை முற்றுகையிட்டு திங்களன்று (டிச-20) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொது சுகாதாரத்திற்கு, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் மீன் பண்ணை களை அகற்ற கோரியும், விதிமுறை களை மீறி குடியிருப்பு பகுதியில் செயல்படும் மீன் பண்ணைகளுக்கு மின் இணைப்பு வழங்கிய மின் வாரிய அதிகாரிகள், அதற்கு துணை போன வருவாய் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.