districts

img

குடிநீர் கேட்டு சாலை மறியல்

கடலூர், மே 31- விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி கிராமத்தில் மேட்டுத்தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராம மக்கள் குடிநீர் கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் புதனன்று (மே 31) மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் காவல் துறையினர், அரசு அதிகாரிகள் இன்னும் சில நாட்களில், அந்த பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

;