சோழிங்கநல்லூர் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி 182வது வட்டம், திருவள்ளுவர் நகரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியை பாதுகாக்க கோரி வியாழனன்று (ஜூன் 1) சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் பால் ஆனந்தராஜியிடம், குடியிருப்போர் சங்க நிர்வாகி எஸ்.ஜெயபிரகாசன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.