districts

img

வெறுப்பு அரசியலுக்கு எதிராக சிதம்பரம் பகுதியில் மக்கள் இசை, நாடகம்

சிதம்பரம், ஜன.20- சிதம்பரம் அருகே பரங்கிப் பேட்டை பேருந்து நிலையத்தில் அன்பிதலனை அறம் சார்பில் இந்தியா வில் அரசியல் சமூக பொரு ளாதார பண்பாட்டு தளத்தில் வெறுப்பு அரசியல் புகுத்தப்படுவதை எதிர்த்து மக்கள்  இசை நாடகம் நடைபெற்றது. பாஜக ஜனநாயக சமூகம் அச்சுறுத்த படுகிறது. அரசமைப்பு சட்டம் சிதைக்கப்பட்டு கூட்டாட்சி தத்துவம் பறிக்கப்படுகிறது. சமூக சமநிலை சீர்குலைக்க பாட்டு அதிகாரங்கள் ஒன்றியத்தில் குவிக்கப்படுவதாகவும் இதற்கு எதிராக மத நல்லிணக்கம், ஜன நாயகத்தை பாதுகாக்கவும் செப். 23 இல். தொடங்கி ஜனவரி 30 வரை இந்திய மக்கள் நாடகமன்ற  கலை பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் ராப் இசை,  மக்கள் இசை, ஆட்டக் கலைகள்,  கவிதை வாசிப்பு, நாடகங்கள் உள்ளிட்டவைகள் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரங்கிப் பேட்டை பேரூராட்சி  தலைவர் தேன்மொழி சங்க தலைமை தாங்கி னார். இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முகமது யூனுஸ், திமுக சார்பில்  உசேன், மாவட்ட பிரதிநிதி சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றி குழு உறுப்பினர் ஜெயசீலன், 12வது வார்டு உறுப்பினர் அருள்  முருகன், 14 வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள். விவசாய சங்கத் தலைவர் கற்பனைச் செல்வம், செயலாளர் கொளஞ்சி உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி ,காங்கிரஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், உள்ளிட்ட அனைத்து கட்சி களை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல் சிதம்பரம் நகரத்தில்  காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பி. ரமேஷ் பாபு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்தலைவர் மூசா,  சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், மாவட்ட குழு மற்றும் நகர் குழு  உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு  அமைப்புகளின் முக்கிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.