அம்பத்தூர், ஆக. 24-
பூந்தமல்லி நகராட்சி பகுதியில் 21 வார்டு கள் உள்ளன. இந்த வார்டுகளில் கண்டோன் மெண்ட் பகுதி, பழங்கோட்டைத் தெரு, கரையான்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மாடுகள் வளர்க்கப்படுகிறது.
இந்த மாடுகளை சாலைகளில் திரிய விடக்கூடாது. மாடுகள் வளர்ப்போர் அவற்றை மாட்டுத் தொழுவத்தில் பரா மரிக்க வேண்டும். அதனை மீறி பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தும் வகையில் மாடுகள் திரிந்தால், அந்த மாடுகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும். மேலும் பறிமுதல் செய்யப்படும் மாடுகளை பராமரிப்பு செலவு, தீவன கட்டணம் வசூலிக்கப்படும்.
மாடுகள் சாலைகளில் திரிந்தால் அவற்றை பறிமுதல் செய்ய நகராட்சி துப்புரவு ஆய்வாளர், மேற்பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.