சென்னை, டிச. 19 - அரசு ஒதுக்கிய நிலத்தில் வசித்து வரும் 300 குடும்பங்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை, கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ், தாம்பரம் பகுதிக் குழு உறுப்பினர் ஜெயவேல், கிளை செய லாளர் தினகரன் மற்றும் கங்காதரன் ஆகி யோர் சந்தித்து மனு அளித்தனர். அதில், தாம்பரம் வட்டம், சேலையூர் கிராமம், பாரத் நகரில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. 1992ம் ஆண்டு தாம்பரத்தில் ஜிஎஸ்டி விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சாலையோரம் இருந்த மக்களை வருவாய்த்துறையினர் பாரத் நகரில் குடியமர்த்தினர். அந்த இடத்தை கிரயம் செய்து கொள்ள, 1993 முதல் அங்குள்ள மக்கள் கிரயத் தொகையை மாதத்தவணையாக செலுத்தி வந்தனர். இத்திட்டத்தை வாரியம் முழுமையாக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டது. தற்போது, இங்கு வசிக்கும் ஏழை, எளிய மக்களின் குடியிருப்பை பாது காக்க பயனாளிகளுக்கு கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.மற்றொரு மனுவில்,
மாடம்பாக்கம் ஏரி
சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாடம்பாக்கம் ஏரி, அதன் சுற்றுப்புற பகுதி களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதார மாக உள்ளது. மேலும் அந்தப் பகுதி களில் உள்ள விவசாயத்திற்கு பாசன ஆதார மாகவும் உள்ளது. எனவே, இந்த ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி புனர மைக்க அப்பகுதி மக்கள் கோரி வரு கின்றனர். மாடம்பாக்கம் ஏரி பாதுகாப்பு குழுவினர் 3 ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் முயற்சியால், ஏரியை புனரமைக்க பொதுப்பணித்துறை 6 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு கொடுத்துள்ளது. அந்த தொகையினை ஒதுக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.