சென்னை, மார்ச் 16- சென்னை மெட்ரோ ரயில் நிலை யங்களில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 41 எஸ்கலேட்டர்கள் அமைக் கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் 54.1 கி.மீட்டருக்கு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2ஆவது கட்ட மெட்ரோ பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது இந்நிலையில், முதல் கட்ட வழித் தடத்தில் பயணிகளின் வசதிகளுக்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுத லாக எஸ்கலேட்டர்களை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மீனம்பாக்கத்தில் 4, நங்கநல்லூர் சாலையில் 2, கிண்டி யில் 2, சின்னமலையில் 1, நந்தனத்தில் 2, தேனாம்பேட்டையில் 1, டிஎம்எஸ் 2, ஆயிரம் விளக்கில் 1, அரசினர் தோட்டத்தில் 1, உயர்நீதிமன்றத்தில் 1, மன்னடியில் 1, வண்ணாரப்பேட்டை யில் 1, தியாகராய கல்லூரியில் 2, தண்டையார் பேட்டையில் 1 என்று மொத்தம் 22 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும் எழும்பூரில் 2, நேரு பூங்கா வில் 1, அண்ணா நகர் கிழக்கில் 1, அண்ணா நகர் டவர் பூங்காவில் 3, திருமங்கலத்தில் 5, வட பழனியில் 4, ஈக்காட்டுத்தாங்கலில் 2, செயின்ட் தாமல் மவுன்ட்டில் 1 என்று மொத்தம் 19 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட வுள்ளது. இதன்படி முதல் கட்ட வழித் தடத்தில் கூடுதலாக 41 எஸ்கலேட்டர் கள் அமைக்கப்படுகிறது.