districts

img

விழுப்புரம் ரயில் நிலையத்தை மேம்படுத்த பயணிகள் கோரிக்கை

விழுப்புரம், அக்.22- அனைத்து அடிப்படை வசதி களுடன் விழுப்புரம் ரயில் நிலை யத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் ரயில் நிலையம் தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகவும், சென்னை, கோவை, திருச்சி போன்ற ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக முக்கிய சந்திப்பாக வும் உள்ளது, இங்கிருந்து சென்னை, மதுரை, திருப்பதி, மயிலாடுதுறை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுவதுடன், சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், குரு வாயூர், மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற இடங்க ளுக்கு செல்லக்கூடிய ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக செல்கின்றன. மொத்தம் 117 ரயில்கள் விழுப்பு ரம் வழியாக சென்று வருகின்றன. இவற்றில் திருப்பதி, புருலியா, கொரக்பூர் உள்ளிட்ட 6 எக்ஸ்பிரஸ் ரயில்களும், புதுச்சேரி, தாம்பரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை எழும்பூர், மேல்மருவத்தூர், காட்பாடி உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் என 14 ரயில்களும் இங்கி ருந்து புறப்பட்டுச் செல்கின்றன. இந்த ரயில் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பய ணிகள் வந்து செல்கின்றனர். இத னால் எந்நேரமும் விழுப்புரம் ரயில் நிலையம் பயணிகள் கூட்டம் மிகுந்து காணப்படும். மேலும் முண்டியம்பாக்கத்தில் சரக்கு ரயில் முனையம் உள்ளதால் சரக்கு ரயில்களும் விழுப்புரம் வழி யாக இயக்கப்படுகின்றன. விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அதிகளவில் ரயில்கள் வந்து செல்வதால் சில சமயங்களில் ரயில்களை நிறுத்த இடமில்லாமல், நிலையத்துக்கு வெளியே நிறுத்த வேண்டிய சூழல் உள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ரயில் நிலை யத்தில் பிளாட்பாரங்களின் எண்ணிக்கை 6 மட்டுமே உள்ளன. எனவே கூடுதலாக பிளாட்பாரம் அமைத்து, முழுமையாக மேற்கூரை அமைக்க வேண்டும் என்றும், கூடுதல் இருக்கைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.