districts

வாகனங்களில் கட்சித்தலைவர்கள் பெயர் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை 

சென்னை,பிப்,24-  கார் மற்றும் மோட்டார் சைக்கிள் களின் வாகன பதிவெண்களில் பலர் கட்சி  தலைவர்களின் பெயர் மற்றும் போட்டோக் களை எழுதி வைத்திருப்பார்கள் மீது போக்கு வரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  கடந்த ஒரு மாதமாக முறையாக வாகன  பதிவெண்களை பராமரிக்காத நபர்களை பிடித்து காவல்துறையினர் எச்சரித்து வந்தனர். இந்தநிலையில் பதிவெண்களை முறைகேடாக அமைத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக் கையை போக்குவரத்து காவல்துறையினர் சனிக்கிழமை  மேற்கொண்டனர்.   சென்னையில் வேப்பேரி, புரசைவாக் கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த அபராத வசூல் வேட்டை நடைபெற்றது. முதல் முறை சிக்கினால் ரூ.500 அபராதமும் 2-வது  முறை பிடிபட்டால் ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். வேப்பேரி யில் போக்குவரத்து காவல்துறையினர் பதி வெண்களை முறையாக எழுதாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.500 அபரா தம் விதித்தனர். இது தொடர்பான நோட்டீ ஸ்களையும் வண்டியில் ஒட்டினர். சென்னை  மாநகரம் முழுவதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

 

 

;