districts

img

உவர்நீரை குடிக்க முடியாமல்அவதிப்படும் பாரிவாக்கம் இருளர் இனமக்கள்

திருவள்ளூர், ஜூன் 24-

      பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம் ஊராட்சி ஏரிக்கரையில் வாழும்  பழங்குடி இருளர் இன மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர்  உவர்நீராக உள்ளதால் கேன்களில் நிரப்பி விற்கப்படும் தண்ணீரை அவர்கள் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பூந்தமல்லி அருகில் உள்ள பாரிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரையில் 23 இருளர் இன குடும்பங்கள் 30 ஆண்டு களுக்கு மேலாக குடிசையமைத்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக  இருளர் இன மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர்  மஞ்சள்  நிறத்தில் உவர்நீராக வருவதால் அதனை குடிக்க  முடிய வில்லை.  மற்ற தேவைகளுக்கும்  பயன்படுத்த இயலவில்லை. சென்னை மையப்படுத்தியில் உள்ள மக்களுக்கு குடிக்கக் கூட பாதுகாக்கப்பட்ட தண்ணீர் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தில் இருக்கும்  முதியோர், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப் படுகின்றனர்.

    இதனால் அந்த மக்கள் கேன் குடி நீருக்கு  மாறி வருகின்றனர். இதனால் ஒரு குடும்பத்திற்கு வாரத்திற்கு  ரூ.150 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    தாங்கள் வாழும் இடத்திற்கு பட்டா இல்லை, சாலை வசதி , மின்சாரம் இல்லாமல் வாழ்கின்றனர்.

    மலைவாழ் மக்கள் வேண்டுகோள் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழரசு, மாநில துணைத் தலைவர் இ.கங்கா துரை, மாவட்ட துணை நிர்வாகி எம்.ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூந்த மல்லி நகர செயலாளர் பாரி ஆகியோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று அம்மக்க ளின் நிலையை விசாரித்தனர்.  மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இவர்க ளுக்கு  பாதுகாப்பட்ட  குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டா, மின்சாரம்  உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.