கிருஷ்ணகிரி, பிப்.8- போச்சம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கிய 3 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. இதனால், பிப். 6 ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பிப். 7 ஆம் தேதி பள்ளிக் கூடம் திறக்கப்பட்டது. ஆனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். இதையடுத்து, பள்ளி கல்வித் துறை, வரு வாய்த்துறை அலுவலர்கள், பெற்றோர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னார். மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் தங்க துரையும் பெற்றோர்களை சந்தித்தார். அப்போது, பள்ளியின் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண் காணிக்கப்படவேண்டும். சுற்றுச் சவர் கட்டிக் கொடுக்க வேண்டும். பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களை யும் ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும். புதி தாக ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும். பாதிக்கப் பட்ட சிறுமிக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு விரைவில் செய்து தர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி னர். இதனிடையே தொடக்கக் கல்வி இணை இயக்குநா் சாந்தி, கல்வித் துறை அதிகாரிகள் 3 ஆவது நாளாக பள்ளி யில் விசாரணை நடத்தினர்.