திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சிமன்ற பொங்கல் விழாவையொட்டி மலையடிவாரத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, போர்வை ஆகியவற்றை ஊராட்சி மன்றத் தலைவர் ரமணி ராஜசேகரன் வழங்கினார். துணைத் தலைவர் அரவிந்தன், சமூக ஆர்வலர் சையத் ஷாகிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.