districts

img

கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் பனைமரங்கள் வெட்டி சாய்ப்பு

திருவள்ளூர், டிச. 18- கும்மிடிப்பூண்டியில் பனை மரங்களை அனுமதியின்றி வெட்டிய நபர்களை வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்கள் உள்ளன. அதில் அடங்கிய 526 ஊராட்சிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ கத்திலேயே முதன்முதலாக “பனை விதை வங்கி” என்ற ஒரு சிறப்பு திட்டத்தை முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி நடத்தி வந்தார்.தமிழ கத்தில் 15 கோடி பனை மரங்கள் இருந்த நிலையில், தற்போது 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளது. தற்போது திரு வள்ளூர் மாவட்டத்தில் பனை மரம் பாதுகாப்பு என்பது கேள்விக்குறி யாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் பனை மரம் இனமே அழிந்து விடும் ஆபத்து உள்ளது. இது குறித்து வருவாய் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த விதமான நட வடிக்கை இதுவரை எடுக்க வில்லை என்கிறார்கள். இதற்கிடையே பொதுமக்களும் தனி யார் நிறுவனங்களும் பனை மரங்களை வெட்டி சாய்த்து வந்த நிலையில், தற்போது கும்மிடிப்பூண்டி  ஒன்றியத்தில் அடங்கிய ஓபசமுத்திரம் என்ற ஊராட்சியில், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளே முன் நின்று பனை மரங்களை வெட்டி சாய்த்து அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தயாராகி வருகின்றனர்.  இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட பனைவிதை வங்கியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் பால கிருஷ்ணன் தெரிவிக்கையில்,  தமிழகத்தின் அடையாளமாக திகழும் நீண்ட ஆயுளையும் பயன்பாட்டையும் கொண்ட பனை மரங்கள் ஈவுஇரக்கமின்றி வெட்டி சாய்க்கப்படுகிறது. பனை அதிகாரிகளிடமும், காவல் துறை யிடமும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை யில், கும்மிடிப்பூண்டியில் ஊரக வளர்ச்சித் துறையின் பொறி யாளர்களே பனை மரங்களை வெட்டி சாய்த்துள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை செய்து பனை மரங்களை வெட்டிய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.