districts

img

உத்தனப்பள்ளியில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் : பி.டில்லிபாபு பங்கேற்பு

கிருஷ்ணகிரி,ஏப்.24- கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் மக்களின் அடிப்படை பிரச்ச னைகளை தீர்க்கக் கோரி  மார்க்சிஸ்ட் கட்சி சூளகிரி  வட்டக் குழு சார்பில் அரசி யல் விளக்க பொதுக்கூட்டம் வட்டச் செயலாளர் எஸ் முனியப்பா தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்  தலைவர் முருகேசன் வரவேற்றார். பொருளாளர் எம்.எம்.ராஜூ முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டில்லிபாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் மகாலிங்கம் பிரகாஷ்,கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆச்சாரி,மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் சரஸ்வதி ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில் பேசிய  டில்லிபாபு, “ சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டங்களில் சிப்காட் அமைப்பதற்காக தென் பெண்ணை ஆற்றோர வளமான விவசாய நிலங் களை கார்ப்பரேட் முதலாளி களுக்கு கொடுக்க அரசு எடுத்த முயற்சிகள் முறியடிக் கப்பட்டது என்றும் கடந்த  4 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கமும் தொடர்ந்து போராடியதால் விவசாயிகளின் வாழ்வாதார மும் காப்பாற்றபட்டது என்றும் கூறினார். மே 3 பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத் தில் சாதி ஆணவப் படு கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட  நிர்வாகம் படுமோசமாக உள்ளதை கண்டித்து மே 3  அன்று தேனிகனிக்கோட்டை யில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங் கேற்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.