districts

img

மனைப்பட்டா வழங்க மறுத்தால் குடிசை அமைத்து குடியேறுவோம் பெ.சண்முகம்

திருவள்ளூர், ஜூன் 5-

     கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் குடிமனை மற்றும் பட்டா வழங்கவில்லை என்றால் வருகிற ஜூலை 4ஆம் தேதி அந்தந்த கிராமங்களில் அரசு நிலத்தில் குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தயாராகி வருவதாக மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கூறினார்.  

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம்,  ஈகுவார் பாளையம், செதில்பாக்கம், ஆரம்பாக்கம்,  சிறுபுழல்பேட்டை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடி மனைப்பட்டா வழங்க வேண்டும், ரெட்டம்பேடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்டு பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஞாயிறன்று (ஜூன்4) கும்மிடிப்பூண்டியில்  நடை பெற்றது.

   இதில் பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பேசுகையில், “விளையாட்டு போட்டிகளில் சர்வதேச அளவில் பெருமையை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகள் ஒன்றரை மாதங்க ளாக தில்லி தெருக்களில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்க ளுக்கு ஆதரவாக  மாநகராட்சியை சுற்றிலும் முற்றுகை இடுவது என ஐக்கிய விவசாய முன்னணி முடிவெடுத்துள்ளது”என்றார்.

    தமிழ்நாட்டில் 25 லட்சம் குடும்பங்கள் 26 வகையான அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கின்றனர். 2.25 கோடி ரேசன் அட்டைகள் உள்ளன. இதில் யார், யாருக்கு சொந்த வீடு இல்லையோ, அவர்களுக்கு சொந்த வீடுகளை கட்டிக் கொடுத்தால் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தால் விவசாயிகள் சங்கம் பாராட்டும் என்றும் அவர் கூறினார்.

   விண்ணப்பம் செய்து காத்திருக் கும் ஏழை எளிய மக்களுக்கு குடி மனை மற்றும் பட்டா வழங்க வில்லை என்றால் அடுத்த மாதம் ஜூலை 4ஆம் தேதி அந்தந்த கிராமங்களில் வாழும் மக்கள் குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டம் நடத்தவேண்டும் என்றும் சண்முகம் அறிவித்தார்.