districts

img

என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியை வீழ்த்துங்கள்

புதுச்சேரி மக்களுக்கு சிபிஎம் வேண்டுகோள்

புதுச்சேரி, மார்ச் 30- ஐந்து ஆண்டுகளாக மக்களைப் பற்றியே கவலைப்படாத என். ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்ட ணியை புதுச்சேரி மக்கள் புறக்க ணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ. பெரு மாள் கேட்டுக்கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்த லில் முத்தியால்பேட்டை தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சரவ ணனை ஆதரித்து  கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ. பெரு மாள் தொகுதி முழுவதும் வாக்கு கள் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டு களாக மக்கள் வளர்ச்சி திட்டங்க ளைப் பற்றி கவலைப்படாத என்.ஆர்.  காங்கிரஸ், அதிமுக கூட்டணி இன் றைக்கு திடீரென்று மக்களிடத்தில் வாக்கு சேகரிக்க வருகின்றனர். தொகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை பற்றி மக்கள் மன்றத்தில் பேசாதவர்கள் இன் றைக்கு மத்திய பாஜக கட்சியோடு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள்” என்றார்.

இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்  பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலவும்  குடிநீர் பிரச்சனை, அடிப்படை பிரச்ச னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்  காமல் சுய நலமாக செயல் பட்டுள்ளார். மத்திய பாஜக அரசு  அண்மையில் மின்சார துறையை  தனியார் மயமாக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்ட போது அதற்கு உறு துணையாக  இருந்தவர்தான் இந்த  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். எனவே மக்களைப் பற்றி கவலைப் படாதவர்கள் இத்தேர்தலில் புறக் கணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் போட்டியிடும் வேட்பா ளர் சரவணன் குடி மனைப்பட்டா மற்றும் குடி தண்ணீருக்காக ஏராள மான மக்கள் பிரச்சினையில் தலை யிட்டு தீர்வு கண்டவர். சரவண னுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்  சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் இதன் மூலம் ஜனநாயகத்தை பாது காக்க இந்த பிரச்சாரத்தில் பிரதேச செயலாளர் இரா. ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

;