districts

img

அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் ஜாக்டோ ஜியோ சென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

சென்னை, பிப். 19- அரசுத்துறைகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என ஜாக்டோ - ஜியோ வலி யுறுத்தியுள்ளது. ஜாக்டோ - ஜியோ சென்னை மாவட்டம் சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு சென்னை யில் உலக பல்கலைக்கழக சேவை மையத்தில் ஞாயிறன்று (பிப். 19) நடைபெற்றது. மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் ம. அந்தோணிசாமி (அரசு ஊழியர் சங்கம்), கா.சாந்த குமார் (பட்டதாரி ஆசிரியர் கழகம்), கே.சத்தியநாதன் (ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), ஏ.கண்ணன் (முதுநிலை பட்டதாரி ஆசி ரியர் கழகம்), க.சாந்த குமார் (ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசி ரியர் அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.பி.பழனி வேலு வரவேற்றார். தலைமை செயலக ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் ஜீவன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலை வர் உ.சுமதி, மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.நம்பிராஜன், ச.டானியல் ஜெயசிங் (வணிகவரி பணியாளர் சங்கம்), ஜெ.கங்காதரன், ந.தாயு மானவன் (தமிழாசிரியர் கழகம்), சுந்தரமூர்த்தி (சத்துணவு ஊழியர் சங்கம்), சுந்தரமூர்த்தி (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), ஆர்.பிரபுதாஸ் (மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம்), என்.ரமேஷ் (தொழிற் பயிற்சி அலு வலர் சங்கம்), எஸ்.ஆரோக்கிய தாஸ் (உடற்கல்வி ஆசி ரியர்கள், இயக்குநர்கள் சங்கம், கே.ஆனந்த் (பல்கலைக்கழக ஆசி ரியர் சங்கம்), கி.தட்சிணா மூர்த்தி (உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்) ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன் சிறப்பு ரையாற்றினார். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். அரசு ஊழியர் சங்கம் தென்சென்னை மாவட்டத் தலைவர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
1.4.2003க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்த வருக்கு தற்போது நடை முறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒன்றிய அரசு அறிவிக்கும் அகவிலைப்படியை அதே தேதியில் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.