இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற ஒன்றிய அரசு சார்ந்த துறைகளின் ஓய்வூதியர்களுக்கு நிகரான ஓய்வூதியம் பிற வங்கி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வங்கி ஓய்வூதியர் மற்றும் பணி ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பு (தமிழ்நாடு அலகு) சார்பில் சென்னையில் செவ்வாயன்று (ஜூன் 20) தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் எஸ்.பி.சி.கருணாகரன், செயலாளர் கே.சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.