சென்னை,ஜன.14- தொலைதூர ரயில்களில் சாதாரண டிக்கெட்டில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிகளை பயணிக்க அனுமதிக்கும் திட்டத்தை இந்திய ரயில்வே துறை செயல்படுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. பொது பெட்டியில் பயணம் செய்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் சாதாரண டிக்கெட் வைத்தி ருப்பவர்களை படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க அனுமதிப்பது குறித்து இந்திய ரயில்வே துறை பரிசீலனை செய்து வருவதாகத் தெரிகிறது. படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் மொத்தமுள்ள இடங்களில் 80 விழுக்காடுக்கும் குறைவாக நிரம்பும் ரயில்களின் விவரங்களை திரட்டுமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள படுக்கை வசதியுள்ள பெட்டிகளை சாதாரண பெட்டிகளாக பயன்படுத்திக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதன் முதலில் இந்தத் திட்டத்தை மத்திய கிழக்கு மண்டல ரயில்வே செயல்படுத்தியது. அதன்படி எண்ணற்ற பயணிகள் பலன் அடைந்தனர். மீண்டும் அதே பாணியில் அமலுக்கு வர இருக்கின்ற திட்டத்தின் அடிப்படையில் சாதாரண டிக்கெட் கொண்ட ரயில் பயணிகள் இனி படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் பயணிக்கலாம்.