சென்னை,ஜன.2- புத்தாண்டு பரிசாக ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், கலைஞரின் 354 அரசாணையை நடை முறைப் படுத்த, முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு மருத்துவர்கள் வர லாற்றில் முதன்முறையாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என ஒவ்வொரு மருத்துவரும் தவமிருந்தோம். எதிர்பார்த்தபடியே மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தது. இருப்பினும் முதல்வர் ஏற்கனவே உறுதி யளித்தபடி அரசு மருத்துவர்க ளின் கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை. அதுவும் முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால், இதுவரை எந்த முதல்வருமே சந்தித்திராத அளவுக்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது. அந்த கடினமான நேரத்தில் தமிழகத்தின் பலமாக இருந்தது 19 ஆயிரம் அரசு மருத்துவர்கள் தான் என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். எனவே, நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட கலை ஞரின் அரசாணைக்கு (354) உயிர் கொடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருவதை நினைவுப்படுத்த விரும்புகிறோம். மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு கல்வி தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்க வேண்டுகிறோம். முதல்வர் தலைமையில் ஜனவரி 4 அன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கேரிக்கைகள் நிறை வேறும் வகையில் புத்தாண்டு பரிசாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான போராட்டக்குழுத் தலைவர் மரு. எஸ். பெருமாள் பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.