districts

img

புதுச்சேரி கடற்கரையில் காவல் துணையகம் திறப்பு

புதுச்சேரி, ஜன. 17- புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையிலும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு போக்கு வரத்து நெறிமுறைகளை விளக்கிக்கூற ஏதுவாகவும் கடற்கரைச் சாலையில் தனியார் நிதி பங்களிப்புடன் காவல் துணையகம் (போலீஸ் பூத்) புதிதாக கட்டப்பட்டது. புதுச்சேரி காவலர்களின் தொப்பி வடிவில் கட்டப் பட்டுள்ள இந்த புதிய கட்டி டத்தை முதலமைச்சர் என்.ஆர். ரங்கசாமி திறந்து வைத் தார்.  அமைச்சர்கள் நமச்சி வாயம், லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, ரமேஷ்,  காவல் துறை கூடுதல் இயக்குநர் ஆனந்தமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.