சென்னை, ஜூலை 11- சென்னை கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் ஜூனியர் குப்பண்ணா 24 மணி நேர உணவகம் திறக்கப்பட்டுள்ளது. பாரத் மேட்ரிமோனியின் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் இதனைத் திறந்துவைத்தார். இந்த உணவகம், ஜூலை 11 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. தமிழ் 2000 என்கிற கருத்தாக்கத்துடன் உருவாக்கப்பட்ட 24மணி நேரம் இயங்கும் முதல் ட்ரைவ் - இன் ரெஸ்ட்டாரன்ட் இதுவே ஆகும். தமிழ்ப் பண்பாடு, கலை, இசை மற்றும் திரைப்படம் சார்ந்த பொழுபோக்கு அம்சங்களைக் கொண்ட நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறும். பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கள் நேரத்தை செலவழித்து உண்டு மகிழலாம் என்று அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.