‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற கொள்ளை முழுக்கத்துடன் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடலூரில் எஸ்.அசோக் தலைமையில் வடலூர் சுதா மருத்துவமனை மருத்துவர் சரவணன் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.பி.தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.