districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் செங்கல்பட்டு ராஜேஸ்வரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் முதல் கையெழுத்திட்டு துவக்கி  வைத்தார். வாலிபர் சங்கத்தின்மாவட்ட நிர்வாகிகள் சதிஷ்குமார், ஜீவானந்தம், விஜயகுமார், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் தமிழ்பாரதி, கல்லூரி கிளை நிர்வாகிகள் சாரதி, சத்யன்,நவீன், அர்ச்சனா புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.