districts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

ஆலந்தூர்,அக்.22- தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.  பேருந்து,ரயில்களில் கூட்டம் நிரம்பியுள்ளதால் இறுதி நேரத்தில் பயணிகள் பலர் விமானங்களில், சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு 35 ஆயிரத்தில் இருந்து 40  ஆயிரம் வரை பயணிகள் பயணம் செய்கின்ற னர். அது தற்போது, 50 ஆயிரத்தையும் கடந்து இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததையொட்டி, விமானங்களின் பயண கட்டணமும், பல மடங்கு உயர்ந் துள்ளது. விமான கட்டணங்கள் 3 மடங்கு வரை  உயர்ந்துள்ளன. சென்னை-டெல்லி இடையே  வழக்கமான கட்ட ணம் ரூ. 6,000. தற்போது  ரூ.12,000 முதல் ரூ.18,000 வரை உள்ளது. சென்னை-கொல்கத்தா வழக்கமான கட்டணம் ரூ.6,500. தற்போது ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை உள்ளது. சென்னை-புவனேஸ்வர் வழக்கமான கட்டணம் ரூ.6,000. தற்போது ரூ.11,000 முதல் ரூ.13,000  வரை உள்ளது. சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,500. தற்போது ரூ.9,000 ஆகும். சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.5,000. தற்போது ரூ.12,000 முதல் 21,000 வரை ஆகும்.   தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களான சென்னை-மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,200.  தற்போது ரூ.12,000. சென்னை-திருச்சி வழக்கமாக ரூ.3,500.ஆனால் தற்போது ரூ.11,500.சென்னை தூத்துக்குடி வழக்கமாக ரூ.4,500. தற்போது ரூ.9,500 முதல் ரூ.11,500 வரை ஆகும். சென்னை கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,500. தற்போது ரூ.11,500 ஆகும். அதிக கட்டணம் கொடுப்பதை தவிர்க்க, பயணிகள் முன்னதா கவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து  இருந்தால் இப்பிரச்சனையை தவிர்த்திருக்க லாம்.

;