districts

கிரேன் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

கொளத்தூர்,ஜூன் 25-  

    சென்னையை அடுத்துள்ள மீஞ்சுர் நந்தியம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் விமலேஷ். 25 வயதான இவர் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமையன்று இரவு விமலேஷ் தனது மோட்டார் சைக்கிளில் ரெட்டேரி பாலத்தில் ஏறி இறங்கிய போது முன்னால் சென்றுகொண்டிருந்த கிரேன் வாகனத்தின் அருகில் நிலைத்தடுமாறி சரிந்துவிழுந்தார் . அப்போது கிரேன் சக்கரத்தில் சிக்கிய விமலேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த திருநேசன் காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விமலேஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கிரேன் டிரைவர் நித்தின் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.