districts

img

நெல் கொள்முதல் 12 மாதமாக பணம் வழங்காத அதிகாரிகள்: விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ராணிப்பேட்டை, ஏப் 22- கலவை அருகே நெல் கொள்முத லுக்கான பணத்தை வழங்காததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் தோணிமேடு, வெள்ளம்பி கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 78 விவசாயிகளிடம் 8 நெல் மூட்டை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கான பணம் ஒருவடத்தை கடக்கும் நிலையிலும் வழங்கப்படவில்லை.  இதுகுறித்து கடந்த 2021 ஜூன் மாதம் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரிடம் விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர். அதன்பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், கொள் முதல் நிலையம் முன்பு விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த வருவாய், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகும் இதே நிலை தொடர்ந்ததால்  2021 ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர் மாதங்க ளில் விவசாயிகள் சங்க நிர்வாகிக ளுடன் ராணிப்பேட்டை ஆட்சிய ரிடமும் முறையிட்டனர். அதி காரிகளை அழைத்து பேசி நட வடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தர விட்டும் அதிகாரிகள் கண்டுக்  கொள்ளவில்லை.

எனவே, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு தலைமையில் ஏப்.22 வெள்ளிக்கிழமை நடந்த காத்திருப்பு போராட்டத்தை மாநிலச் செயலாளர் பி.டில்லிபாபு துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், விவசாயிகள் சங்க ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, வேலூர் மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, சிஐடியு தலைவர் தா.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதனையடுத்து, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஆட்சியர் சமாதான கூட்டத்தை நடத்தினார். அப்போது, ஒரு வாரத்தில் பணத்தை வழங்கு வதாகவும், மேலும் நேரடியாக கள ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர் உறுதியளித்தார். பிறகு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.