திருவண்ணாமலை,ஜூன் 19-
சாதிச் சான்று இல்லாததால் கல்லூரி படிப்பை தொடர இயலாத 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று உயி ருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை, எடப்பாளையம் கிராமம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக 30 குடும்பங்களை சேர்ந்த 80 நபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்க ளின் பிரதான தொழில் பன்றி வளர்த்து அதனை விற்பனை செய்வது.
எடப்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசிக்கும் சரோஜா என்பவரது மகள் ராஜேஸ்வரி நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பில் 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து கல்லூ ரியில் பயில திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி களில் சேர மாணவி ராஜேஸ்வரி முயற்சித்துள்ளார்.
அனைத்து கல்லூரிகளிலும் மாணவி ராஜேஸ்வரியிடம் சாதி சான்று கேட்டுள்ள னர். பன்றி வியாபாரம் செய்யும் மக்கள் பன்னி யாண்டி என்ற சாதி சான்றிதழ் இல்லாத தால் மாணவி ராஜேஸ்வரியால் எந்த கல்லூரியிலும் சேர இயலவில்லை. தன்னு டன் படித்த சக மாணவிகள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்ததால் மன உளைச்சல் ஏற்பட்ட மாணவி ராஜேஸ்வரி ஞாயிறன்று காலை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மகள் பூச்சி மருந்து குடித்த சம்ப வம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் திரு வண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த மாணவியை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ராமதாஸ், மாவட்டச் செயலாளர் ப.செல்வன் ஆகியோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாணவியின் இந்த துயர மான நிலை பரிதாபத்திற்குறியது.
சாதிச் சான்று வழங்ககப்படாததால், விளிம்பு நிலை மாணவர்களின் உயர்கல்வி மறுக்கப்படு கிறது. இனி மேலும் இந்த நிலை தொடராமல் இருப்பதற்கு பட்டியலின மக்க ளுக்கு உடனுக்குடன் சாதிச்சான்று வழங்கக் கோரி திருவண்ணாமலையில் வரு கிற 28 ஆம் மாநில பொதுச்செயலாளர் சாமு வேல்ராஜ் தலைமையில் கோரிக்கை ஆர்பாட்டம்” நடத்தப்படும் என்றனர்.