districts

img

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு

ராணிப்பேட்டை, நவ. 9 – ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வெள்ளியன்று (நவ. 8) வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் அனை வரும் கூட்டத்திற்கு வருகை தந்து சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தும் துறை சார்ந்த அலுவலர்கள் யாரும் வரவில்லை. அதனால் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.