districts

img

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிகாரிகள் பார்வை

வடகிழக்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர்  மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட  குமணன்சாவடி, சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், படையத்தம்மன் குட்டை, அம்மா நகர், நஸ்ரத் பேட்டை யமுனா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிகாரிகள் ஞாயிறன்று (நவ 13)  பார்வையிட்டனர். பணிகளை  பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்,   மாவட்ட  கண்காணிப்பு அலுவலர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் வி.இராஜாராமன்,  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.