districts

img

குடிநீர் வசதி செய்துதர அதிகாரிகள் உறுதி: சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

விழுப்புரம், டிச. 14- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் புதனன்று (டிச. 14) வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்திருந்தது. இந்நிலையில் செவ்வாயன்று (டிச. 13) மாலை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன், ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ண ராஜ், ஆர்.கலியமூர்த்தி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக அந்த பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிய ளித்தார்.இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.