சென்னை, ஜன. 7 - பெண் ஊழியருக்கு பாலி யல் தொல்லை கொடுக்கும் அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் வெள்ளியன்று (ஜன.7) கிண்டி கோட்ட உதவி கணக்கு அலுவலர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிண்டி வருவாய் பிரிவில் உதவி கணக்கு அலுவலராக மாரிமுத்து செயல்பட்டு வருகிறார். நுகர்வோரை அலைகழித்து லஞ்சம் வாங்குவதாகவும், பகுதி நேரமாக பணியாற்றும் பெண் ஊழியருக்கு பாலி யல் தொல்லை கொடுப் பதாக கூறி ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தெற்கு கிளை-1 தலைவர் கே.தரணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டலச் செயலாளர் முரு கானந்தம், நிர்வாகிகள் ஆதன் இளங்கீரன், விஜய பாஸ்கர், குமார் உள்ளிட் டோர் பேசினர்.