புலவர் சா. அந்தோணிசாமி எழுதிய ‘ஆசிரியர் நான் பேசுகிறேன்’ நூலை அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் - அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.பி. பழனிவேல் வெளியிட முனைவர் பி. ரத்தினசபாபதி பெற்றுக் கொண்டார். தமுஎகச திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் கிளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் ச. ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். மாற்றுக் களம் வெளியிட்ட ‘அறிஞர் பார்வையில் சிங்காரவேலர்’ எனும் நூலை அறிமுகம் செய்து ‘தீக்கதிர்’ நாளிதழ் மேனாள் ஆசிரியர் வே. மீனாட்சிசுந்தரம் உரையாற்றினார். இந்நூலின் பதிப்பாசிரியர் முனைவர் அ. பகத்சிங், தமுஎகச கிளை பொருளாளர் நா. வீரபெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.