சென்னை, ஜூலை 23 - சென்னை பல்கலைக் கழகம் தொலைதூரக் கல்வி இயக்கத்தில் தொடர்ந்து மாணவர் விரோத செயல்பாடுகள் நடைபெறுகிறது. இதனை உயர் கல்வித்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சி யின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: தொலைதூரக் கல்வி இயக்கத்தில் பயிலும் மாணவர்களுக்கு குறிப் பிட்ட கால இடைவெளி களில் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட நேரடி வகுப்புகள் தற்போது வரை நடத்தவே இல்லை. மாணவர்கள் தரப் பில் பலமுறை கோரிக்கை விடுத்தும், நேரடி வகுப்பு களை நடத்தாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, உடனடியாக நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும். தொலைதூரக் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒவ் வொரு கல்வி ஆண்டிலும் இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும். ஆனால், 2021-2022 கல்வி ஆண்டின் இரண்டாம் பருவத் தேர்வு களை நடத்தி முடிக்காமல் உள்ளனர். இந்த சூழலில் அடுத்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை ஜூலை 29ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இதன்வாயி லாக, தொலைதூரக் கல்வி இயக்கத்தை பணம் வசூலிப்பதற்கான ஒரு கருவி யாக மட்டுமே பல்கலைக் கழகம் நடத்தி வருகிறது. மேலும், வெளியான தேர்வு முடிவுகள் குறித்து மறு மதிப்பீடு, மறு கூட்டல் செய்வதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் உயர் கல்வித்துறை உடனடி யாக சென்னை பல்கலைக் கழகத்தின் மாணவர், கல்வி விரோத செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். மாணவர் நலம் சார்ந்த கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.