சென்னை, ஜன. 2 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சிறப்பு கிளை உறுப்பினர் டி.வெங்கடேஷ் சனிக்கிழ மையன்று (டிச.31) சின்ன நீலங்கரை மீனவ கிராமத்தில் அகால மரண மடைந்தார். அவருக்கு வயது 31. தமுஎகச தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் பகத்சிங் கண்ணனின் மருமகனான வெங்கடேஷ் இந்திய மாணவர் சங்க வளர்ச்சிக்காக திறம்பட செயலாற்றினார். தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசி ரியராக பணியாற்றி வந்தார். அன்னாரது உடலுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், கே.சாமு வேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கள் ஆர். வேல்முருகன்(தென்சென்னை), ஜி.செல்வா(மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.சுகந்தி, ஏ.ஆறுமுக நயினார், சுதீர், சோழிங்க நல்லூர் பகுதிச் செயலாளர் ஜெயவேல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் திங்களன்று (ஜன.2) நீலங்கரை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.