சென்னை, மே 20 - சாதாரணக் கட்டணப் பேருந்துகளை தட இழப்பு இல்லாமல் இயக்க வேண்டும் என்று அதிகாரி களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழக கிளைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் உள் ளிட்டு பொது மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், சாதா ரண கட்டணப் பேருந்துக ளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டத் தால் 40 விழுக்காடாக இருந்த மகளிர் பயணிக ளின் எண்ணிக்கை 61 விழுக்காடாக உயர்ந் துள்ளது. இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல் படுத்தும் வகையில் சாதா ரணக் கட்டணப் பேருந்து களை தட இழப்பு இல்லாமல் இயக்கிட வேண்டும் என அறிவுறுத்தினார். சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பேட்டா வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப் படும் என்றும் அவர் கூறினார்.