கடலூர், ஜூன் 5-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு உறுப்பினர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளருமான எஸ்.பிரகாஷ் தந்தையும், மாவட்ட செயற்குழு உறுப்பினரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவருமான தேன்மொழியின் மாமனாருமான எஸ்.சிவபிரகாசம் (70) காலமானார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த ஊ மங்களத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிவப்பிரகாசத்தின் உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பா.ஜான்சி ராணி, மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் ராதிகா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், வி.உதயகுமார், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், எஸ்.திருஅரசு, என்.எஸ்.அசோகன், ஜே.ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.பாலமுருகன், ஆர்.அமர்நாத், ராஜா, வாஞ்சிநாதன், உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஊமங்கலம் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.