districts

அம்மா உணவகங்களில் புதிய வகை உணவுகள்

சென்னை,மே 12-

    சென்னை மாநகராட்சி யில் 402 அம்மா உணவகங் கள் செயல்பட்டு வரு கின்றன. இங்கு காலையில்  இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் சப்பாத்தி  என மலிவு விலையில் உணவுகள் விற்கப்படு கின்றன. அம்மா உண வங்கள் தொடங்கியபோது இருந்த வரவேற்பு தற்போது குறைந்து வரு கிறது. எனவே அம்மா உண வகத்தில் உணவில் மாற்றம் தேவையா என்ற வகையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2.13 லட்சம் பேர்  தங்களது கருத்தை தெரி வித்துள்ளனர். இதில் 80 விழுக்காட்டினர் மதிய உணவு வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

   அதற்கு ஏற்ப அம்மா உணவகங்களில் உணவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- அம்மா உணவகங்களில் உணவு வகைகளை ருசி யாக தரவேண்டும் என்ற கருத்தை பெரும்பாலா னவர்கள் தெரிவித்துள்ள னர். பொதுமக்களின் கருத்தின் படியே இவற்றை  வழங்கலாமா என்று ஆலோ சிக்கப்பட்டு வருகிறது. கலவை சாதம் இல்லாத ஒரு வேளை உணவு வகைக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை செல விட பலர் தயாராக உள்ளனர்.

  ஒரே விதமான உணவுக்கு பதிலாக சில மாற்றங்களை செய்து வழங்கும் நிலையில் பொது மக்கள் ஓரிரு ரூபாய் கூடுத லாக கொடுக்கவும் தயாராக  உள்ளனர். இந்த ஆய்வு குறித்து அறிக்கை தயாரிக் கப்பட்டு வருகிறது.

   இந்த அறிக்கை விரை வில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு  அரசின் முடிவை பொறுத்து அம்மா உணவங்களின் உணவு வகைகளிலும், விலையிலும் மாற்றம் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் கூறி னர்.