சென்னை, ஜன. 25 - ஆயிரம் விளக்கு தொகுதியில் அப்பாசாமி முதலி தெரு, பத்ரிகரை திட்டப் பகுதி தெற்கு மாடவீதி (கருமான்குளம்), கங்கை கரை புரம் ஆகிய இடங்க ளில் உள்ள வாரிய வீடு களில் 408 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த வீடு கள் 50 ஆண்டுகளை கடந்து சிதிலமடைந்துள்ள பழைய வீடுகளை இடித்து விட்டு 71.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. எனவே, குடியிருப்பு தாரர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை, கருணைத் தொகையாக தலா 24 ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று (ஜன.25) நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளை வழங்கியதோடு, தலா 24 ஆயிரம் ரூபாய் வீதம் 97.92 லட்சம் ரூபாய் கருணைத்தொகையை கா சோலையாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பணிகள் குழுத்தலைவர் நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் பிரேமா சுரேஷ், வாரிய நிர்வாகப் பொறியாளர் கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.